நான் பட்டது, பார்த்தது, கேட்டது, என் மனதோரம் கிடந்தது என்ற உணர்வுகளின் வெளிப்பாடு தான் இந்த கவிதை தொகுப்பு. இதை வாசிக்கும் பொழுது மொழி, உறவு, சமூகம், அன்பு, ஏக்கம், இழப்பு, நிதர்சனம், நடப்பியல் முதலானவற்றுடன் வாசகர்களாகிய நீங்கள் நிச்சயம் பயணம் செய்ய முடியும் என்று நம்புகிறேன். “தமிழா படிக்கப் போகிறாய்..” என்றவர்களின் கேள்விக்கு விடையாக, எனது இந்த பிள்ளையை படைத்து பதில் கூறுகிறேன், “தமிழே என்னை வளர்த்துக் கொண்டும் வாழ வைத்துக் கொண்டும் இருக்கிறது” என்று. என்றென்றும் தமிழுக்கு இவள் மகள்! தமிழ் இவளுக்கு மகள்!
-நிவேதா சந்திரசேகரன்








Reviews
There are no reviews yet.